காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகளை தூய்மை படுத்தும் பணிகள் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளை குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதாவது:-
இருப்பில் உள்ள 1,276 வாக்கு பெட்டிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தூய்மை பணி நடைபெற்றுள்ளது. எஞ்சியுள்ள வாக்கு பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணி ஓரிரு நாளில் முடிவடையும். தேர்தலுக்கான ஆயத்தப்பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






