பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

x
தினத்தந்தி 19 Aug 2021 11:48 PM IST (Updated: 19 Aug 2021 11:48 PM IST)
பெண்ணிடம் 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை அவனியாபுரம் ரோடு, பாம்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 54). சம்பவத்தன்று இவர் மொபட்டில் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். திடீரென்று அவர்கள் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதில் ராஜேஸ்வரி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





