தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2021 8:09 PM GMT (Updated: 20 Aug 2021 8:11 PM GMT)

மதுரையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

மதுரை அனுப்பானடி கீழத்தெருவை சேர்ந்தவர் சுதர்சன். இவருடைய மனைவி திவ்யா (வயது 25). இவருக்கு திருமணம் ஆகி இதுவரை குழந்தை இல்லை. இதனால் கணவர் வீட்டை சேர்ந்தவர்களுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த திவ்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story