மின்சாரம் தாக்கி பெண் பலி

x
தினத்தந்தி 22 Aug 2021 2:00 AM IST (Updated: 22 Aug 2021 2:00 AM IST)
மின்சாரம் தாக்கி பெண் பலி
சோழவந்தான்
சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தைச்சேர்ந்த ஆனந்தன் மனைவி குளோரியா(வயது 37). இவர்கள் அதே கிராமத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகின்றனர். நேற்று மாலை வீட்டிற்கு பின்னால் குளோரியா பொருட்கள் எடுக்கச்சென்றார். அப்போது மின்சாரம் தாக்கியது. இதில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குளோரியாவை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக கூறினார். இதன் பேரில் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தலைமை காவலர் ராஜாமுகமது ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





