விபத்தில் ஊராட்சி துணைத்தலைவர் பலி

x
தினத்தந்தி 23 Aug 2021 2:27 AM IST (Updated: 23 Aug 2021 2:27 AM IST)
விபத்தில் ஊராட்சி துணைத்தலைவர் பலியானார்.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை அருகே துவரிமானைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 62). துவரிமான் ஊராட்சி துணைத் தலைவரான இவர் தினமும் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று குளித்து விட்டு வருவது வழக்கம். அதே போல் நேற்று துவரிமான் கண்மாய் கரை அருகே திண்டுக்கல்- திருமங்கலம் நான்குவழிச்சாலை ஓரத்தில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





