செல்போன் பறித்த வாலிபர் கைது

x
தினத்தந்தி 25 Aug 2021 2:30 AM IST (Updated: 25 Aug 2021 2:30 AM IST)
செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை வசந்த் நகர், மீனாட்சி மில் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சந்தியா (வயது 22). சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நபர் சந்தியா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவர் சத்தம்போட அக்கம் பக்கத்தினர் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து சுப்பிரமணியபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் எல்லீஸ்நகரை சேர்ந்த வெங்கடேஷ் (21) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





