கடை கதவை உடைத்து பொருட்கள் திருட்டு

x
தினத்தந்தி 26 Aug 2021 2:20 AM IST (Updated: 26 Aug 2021 2:20 AM IST)
கடை கதவை உடைத்து பொருட்கள் திருட்டு
மதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் சிவாதவமணி (வயது 38). இவர் விராட்டிபத்து பகுதியில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை வந்திருந்தார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அதன் உபகரணங்கள், டி.வி. உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





