மாடியில் துணி எடுக்க சென்றவர் தவறி விழுந்து சாவு


மாடியில் துணி எடுக்க சென்றவர் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 28 Aug 2021 2:40 AM IST (Updated: 28 Aug 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே மாடியில் துணி எடுக்க சென்றவர் தவறி விழுந்து இறந்தார்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 28).டிரைவர். இவர் கடந்த 24-ந்தேதி தனது வீட்டு மாடியில் துணிகளை எடுக்கச் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அருண்பாண்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story