வாடிப்பட்டி,
சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நான்கு வழி சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தேவகோட்டை சேர்ந்த மனோகரன் மகன் பிரகாஷ் (வயது 24) என்ற வாலிபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். பின் விசாரணையில் சமயநல்லூர் பாத்திமா நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடி வந்ததாக ஒப்புக்கொண்டார்.இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.