மின்சார ரெயில் சேவையில் மாற்றம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு


மின்சார ரெயில் சேவையில் மாற்றம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2021 9:51 AM GMT (Updated: 30 Aug 2021 9:51 AM GMT)

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (30-ந்தேதி) மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி ஆகிய நாட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

* சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 10.10 மணி, 10.56 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் காட்டாங்குளத்தூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-காட்டாங்குளத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஆனால் பயணிகள் வசதிக்காக மதியம் 12 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story