கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 11:57 AM GMT (Updated: 30 Aug 2021 11:57 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நாயுடுகுப்பம் கிராமத்தில் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த பூஜ்ஜையா (வயது 58) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

Next Story