லாரி மோதி மாற்றுத்திறனாளி சாவு


லாரி மோதி மாற்றுத்திறனாளி சாவு
x
தினத்தந்தி 30 Aug 2021 7:04 PM GMT (Updated: 30 Aug 2021 7:09 PM GMT)

பந்தல்குடி அருகே லாரி மோதி மாற்றுத்திறனாளி இறந்தார்.

அருப்புக்கோட்டை,

சாத்தூர் மல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வீரஓவுரெட்டி (வயது 50). மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்தினம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உரம் வாங்கிவிட்டு மூன்று சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பந்தல்குடியில் இருந்து ஆர்.ஆர்.நகர் செல்லும் சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி, அவரது மூன்று சக்கர வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து வீரஓவுரெட்டி இறந்தார். இது குறித்து தகவலின் பேரில் பந்தல்குடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வீரஓவுரெட்டியின் சகோதரர் தமிழ்வாணன் அளித்த புகாரின் பேரில் லாரியை ஓட்டி வந்த இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த பால்ராஜ் (36) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story