பணம் பறித்த 2 பேர் சிக்கினர்


பணம் பறித்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 30 Aug 2021 8:38 PM GMT (Updated: 30 Aug 2021 8:38 PM GMT)

வாலிபரை வழிமறித்து பணம் பறித்த 2 பேர் சிக்கினர்

மதுரை
மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 20). சம்பவத்தன்று இவர் செல்லூர் திருவாப்புடையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் விக்னேசை தாக்கி, அவரிடமிருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் சுற்றிவளைத்து பிடித்து செல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த வீரபிரபு(21), கோபிநாத் (21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story