கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 31 Aug 2021 10:06 PM GMT (Updated: 31 Aug 2021 10:06 PM GMT)

கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கடத்தூர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டி உள்ளது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.  இதையொட்டி கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அறியாமல் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அங்கு உள்ள மீன் கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரின் சீற்றம் குறைந்த பிறகே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்’ என்று கூறினர்.

Next Story