32 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

x
தினத்தந்தி 2 Sept 2021 2:19 AM IST (Updated: 2 Sept 2021 2:19 AM IST)
32 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
உசிலம்பட்டி
உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புதூரை சேர்ந்தவர் வீரமணி (வயது 50). இவர் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வீரமணியின் தோட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் திடீரென்று சோதனை செய்தனர். இதில் அவர் தோட்டத்தில் 32 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்தது தெரியவந்தது. உடனே 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வீரமணியை கைது செய்து உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





