32 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது


32 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2021 2:19 AM IST (Updated: 2 Sept 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

32 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

உசிலம்பட்டி
உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புதூரை சேர்ந்தவர் வீரமணி (வயது 50). இவர் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வீரமணியின் தோட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் திடீரென்று சோதனை செய்தனர். இதில் அவர் தோட்டத்தில் 32 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்தது தெரியவந்தது. உடனே 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வீரமணியை கைது செய்து உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story