மின்சார ரெயில் சேவையில் மாற்றம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு


மின்சார ரெயில் சேவையில் மாற்றம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 5:53 AM GMT (Updated: 3 Sep 2021 5:53 AM GMT)

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (3-ந்தேதி), 4, 6, 8, 11, 13-ந்தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 10.10, 10.56, 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் காட்டாங்கொளத்தூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, காட்டாங்கொளத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30 மணி, மதியம் 12.30, 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, காட்டாங்கொளத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story