தொடர் மழையால் சீனாபுரம் மாட்டுச்சந்தையில் விற்பனை பாதிப்பு


தொடர் மழையால் சீனாபுரம் மாட்டுச்சந்தையில் விற்பனை பாதிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2021 2:43 AM IST (Updated: 4 Sept 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் சீனாபுரம் மாட்டுச்சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டது.

பெருந்துறை
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் நேற்று மாட்டுச் சந்தை நடைபெற்றது. தா்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாய்க்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்ப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன. 
இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 80-ம், இதே இன கிடாரி கன்றுகள் 120-ம், சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 50-ம், இதே வகை கிடாரி கன்றுகள் 140-ம் விற்பனைக்கு வரப்பட்டு இருந்தன.
கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாடுகளை வாங்கவோ, விற்கவோ வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டது. மொத்தம் 100 மாடுகள் மட்டுமே விற்றதாக சந்தை நிர்வாகிகள் கூறினார்கள். 
இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. இதே இன கிடாரி கன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும், இதே வகை கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும் விற்றது. மொத்தம் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்றது. 
1 More update

Next Story