ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 125 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 125 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Sep 2021 9:27 PM GMT (Updated: 3 Sep 2021 9:27 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 132 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆயிரத்து 787 ஆக உயர்ந்தது. இதில் 96 ஆயிரத்து 810 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். நேற்று மட்டும் 148 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தார்கள். தற்போது 1,319 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 62 வயது முதியவர் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு பலியானார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 658 ஆக உயர்ந்தது.

Next Story