ஈரோடு மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Sept 2021 3:00 AM IST (Updated: 6 Sept 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 466 பேருக்கு பரிசோதனை செய்ததில், 109 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 995 ஆக உயர்ந்தது.
அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 124 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 97 ஆயிரத்து 68 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 660 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 1,267 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
1 More update

Next Story