அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு


அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 6 Sep 2021 8:30 PM GMT (Updated: 6 Sep 2021 8:30 PM GMT)

சோழவந்தான் அருகே அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சோழவந்தான்
சோழவந்தான் அருகே அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் வெட்டு
சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டேனியல் (வயது 35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த ேடனியல், ராஜேந்திரனை அரிவாளால் சரிமாரியாக வெட்டினார். 
 கைது
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் கந்தசாமி, அக்காள் பத்திரகாளி மற்றும் தங்கம்மாள் ஆகியோர் ராஜேந்திரனை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 
இதில் 4 பேரும் படுகாயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியலை கைது செய்தனர்.

Next Story