டாஸ்மாக் பாரில் மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல்


டாஸ்மாக் பாரில் மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 11 Sep 2021 4:37 PM GMT (Updated: 11 Sep 2021 4:37 PM GMT)

டாஸ்மாக் பாரில் மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல்

கோவை

கொரோனா விதிகளை கடைபிடிக்க கூறியதால் டாஸ்மாக் பாரில் மாநகராட்சி ஊழியர் மீது மதுபாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திய 2 பேர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

டாஸ்மாக் பார்

கோவை சிங்காநல்லூர் பட்டணம் சாலை நெசவாளர் காலனியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதன் அருகில் உள்ள பாரில் நேற்று கூட்டமாக சிலர் மது குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சோதனை நடத்துவதற்காக மாநகராட்சி ஊழியர் சிவக்குமார் என்பவர் சென்றார். 


அவர், கொரோனா விதிகளை கடைபிடித்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். இதற்கு அங்கு குடிபோதையில் இருந்த 2 வாலிபர்கள் மாநகராட்சி ஊழியர் சிவக்குமாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.

2 பேரை கட்டிவைத்தனர்

பின்னர் அவர்கள் 2 பேரும் திடீரென்று சிவக்குமாரை நோக்கி மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே மாநகராட்சி ஊழியர்கள் சிலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

அவர்கள், குடிபோதையில் ரகளையில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து அடித்து அவர்களின் கைகளை கட்டி சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கு பதிவு

முதல்கட்ட விசாரணையில் மாநகராட்சி ஊழியர்களை தாக்கியவர் கள் நெசவாளர் காலனியை சேர்ந்த சுரேஷ் (வயது26), அசோக்குமார் (25) என்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவையில் மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சிங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story