மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா
மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா
மேட்டுப்பாளையம், செப்.12-
மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள பிரபல பள்ளியில் 9 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்த நிலையில் 75 மாணவர்கள் 57 ஆசிரியர்களுக்கு கொரோனாதொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொரோனாபரிசோதனை அறிக்கை வரும்வரை 9,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 நாட்களில் இருந்து 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story