தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 13 Sep 2021 8:27 PM GMT (Updated: 13 Sep 2021 8:27 PM GMT)

அலங்காநல்லூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அலங்காநல்லூர்,

 அலங்காநல்லூர் அருகே தண்டலை, செவக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னகெங்கை (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா(33). இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கடந்த 7-ந்தேதி இரவு சித்ரா தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story