மணல் திருடிய 2 பேர் கைது


மணல் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Sep 2021 9:41 PM GMT (Updated: 15 Sep 2021 9:41 PM GMT)

மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரையூர், 
பேரையூர் போலீசார் கனிமவள திருட்டு சம்பந்தமாக எஸ்.மேலப்பட்டி பகுதியில் அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது மேலப்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு ஓடையில் இருந்து அதே ஊரை சேர்ந்த பெருமாள் (வயது 50), ஜெயக்கொடி (57) ஆகியோர்  மாட்டு வண்டிகளில் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு வந்தபோது, போலீசார் பிடித்து அவர்களை கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து பேரையூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

Next Story