ஊழியர்களின் மோட்டார் சைக்கிள், செல்போன் திருட்டு


ஊழியர்களின் மோட்டார் சைக்கிள், செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 21 Sep 2021 6:59 PM GMT (Updated: 21 Sep 2021 6:59 PM GMT)

ராமநாதபுரத்தில் கடல் உணவு பூங்கா வளாகத்தில் ஊழியர்களின் மோட்டார் சைக்கிள், செல்போன் திருடு போனது.

ராமநாதபுரம் 

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஒருங்கிணைந்த கடல் உணவு பூங்கா வளாகம் உள்ளது. இந்த பூங்காவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சேவுகபெருமாள் மகன் சரவணன் (வயது 26) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனது அறையின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல உடன் வேலை பார்த்தவரின் செல்போனும் காணவில்லை என்று கூறப்படுகிறது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர் உள்ளே புகுந்து மோட்டார் சைக்கிளையும் செல்போனையும் திருடிச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story