கோவையில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவையில் 235 பேருக்கு கொரோனா பாதிப்புகோவையில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவை
கோவையில் புதிதாக 235 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோவையை சேர்ந்த 88 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 320 ஆக உயர்ந்து உள்ளது. தவிர அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 237 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 430 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2,165 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story






