லாரி பறிமுதல்; 3 பேர் கைது


லாரி பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2021 9:01 PM GMT (Updated: 22 Sep 2021 9:01 PM GMT)

லாரி பறிமுதல்; 3 பேர் கைது

பேரையூர்
டி.கல்லுப்பட்டி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் முகம்மது நூர்தீன் மற்றும் போலீசார் டி.கல்லுப்பட்டி&விருதுநகர் சாலையில் உள்ள என். முத்துலிங்காபுரம் பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, எல்.கொட்டாணிபட்டியை சேர்ந்த வடிவேல்(வயது 35), தங்கமலை(24) , முத்துலிங்காபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாண்டி (25) ஆகியோர் டிப்பர் லாரி ஒன்றில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தனர். வாகன சோதனை செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்து டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Next Story