ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா 2 போ் பலி


ஈரோடு மாவட்டத்தில்  புதிதாக 130 பேருக்கு கொரோனா 2 போ் பலி
x
தினத்தந்தி 22 Sep 2021 9:36 PM GMT (Updated: 22 Sep 2021 9:36 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 2 போ் தொற்றுக்கு பலியானாா்கள்.

ஈரோடு
சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1,046 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 936 பேருக்கு பரிசோதனை செய்ததில் 112 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 134 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 98 ஆயிரத்து 993 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 1,385 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 15-ந்தேதி சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 20-ந்தேதி அவர் இறந்தார். இதேபோல் 55 வயது ஆண் கொரோனா தொற்று ஏற்பட்டு, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி கடந்த 20-ந்தேதி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 668 ஆக உயர்ந்தது.


Next Story