எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2021 8:55 PM GMT (Updated: 23 Sep 2021 8:55 PM GMT)

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம்

புதூர்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடு கிடுவென உயர்ந்து கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் ஒவ்வொரு மாதமும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது சிலிண்டரின் விலை 1,000 ரூபாயை கடந்து விட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே பெண்கள் சிலிண்டர் விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் கோ.புதூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் ஜியாவுதீன், செயலாளர் கமால்பாட்சா, துணைத்தலைவர் ஜாபர்சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக்அகமது, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில தலைவி நஜ்மா பேகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சமையல் எரிவாயு சிலிண்டர் மாலை அணிவித்தும், மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அல்வா கிண்டி பொதுமக்களுக்கு வழங்கியும் நூதனமுறையில் போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Next Story