ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 23 Sep 2021 8:57 PM GMT (Updated: 23 Sep 2021 8:57 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 360 பேருக்கு பரிசோதனை செய்ததில் 130 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1,150 ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 152 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 99 ஆயிரத்து 145 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 668 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 1,337 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story