ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Sept 2021 2:42 AM IST (Updated: 25 Sept 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 652 பேருக்கு பரிசோதனை செய்ததில் 116 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1,248 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 148 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 99 ஆயிரத்து 293 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது தொற்று உள்ள 1,287 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 78 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந்தேதி மூதாட்டி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 668 ஆக உயர்ந்தது.
  
1 More update

Next Story