ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா 2 முதியவர்கள் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா 2 முதியவர்கள் பலி
x
தினத்தந்தி 25 Sep 2021 9:15 PM GMT (Updated: 25 Sep 2021 9:15 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தொற்றுக்கு 2 முதியவர்கள் பலியானாா்கள்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 121 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 1,360 ஆக உயர்ந்தது. இதில் 99 ஆயிரத்து 432 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 139 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 1,258 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர். 77 வயது முதியவரும், 80 வயது முதியவரும் கடந்த 23-ந் தேதி உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 670 ஆக உயர்ந்தது.

Next Story