சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கமிஷனர் வெகுமதி


சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கமிஷனர் வெகுமதி
x
தினத்தந்தி 26 Sep 2021 9:45 AM GMT (Updated: 26 Sep 2021 9:45 AM GMT)

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கமிஷனர் வெகுமதி.

சென்னை,

சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்த 3 பேரை கைது செய்த எம்.கே.பி. நகர் சப்-இன்ஸ்பெக்டர் கல்வியரசன், போலீஸ்காரர்கள் மலைவேல், கார்த்திக், யானைக்கவுனி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த யானைக்கவுனி போலீஸ்நிலைய போலீசார் பெருமாள்சாமி, செந்தில்குமார், சுகுமார், பார்த்திபன், கொத்தவால்சாவடி பகுதியில் நடந்த தீ விபத்தில் 60 வயது மூதாட்டி, 12 வயது சிறுவனை பத்திரமாக மீட்ட ஏழுகிணறு போலீஸ் நிலைய ரோந்து வாகன டிரைவரான ஆயுதப்படை போலீஸ்காரர் சுந்தர்ராஜ் ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


Next Story