32 பேருக்கு கொரோனா


32 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Sep 2021 7:17 PM GMT (Updated: 26 Sep 2021 7:17 PM GMT)

மதுரையில் நேற்று 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மதுரை, 
மதுரையில் நேற்று 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 25 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 502ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 31 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 18 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 73 ஆயிரத்து 84 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 254 ஆக உள்ளது. கடந்த சில தினங்களாக மதுரை மட்டுமின்றிஅனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story