மொடக்குறிச்சியில் 72 நாய்- பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

x
தினத்தந்தி 28 Sept 2021 9:21 PM IST (Updated: 28 Sept 2021 9:21 PM IST)
மொடக்குறிச்சியில் 72 நாய்- பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் இலவச தடுப்பூசி முகாம் மொடக்குறிச்சி வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. மொடக்குறிச்சி கால்நடை மருத்துவமனையில் நடந்த இந்த முகாமை வட்டார கால்நடை உதவி இயக்குனர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இதில் 72 நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
இதேபோல் மொடக்குறிச்சி வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் இந்த தடுப்பூசி முகாம் நடந்தது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





