படப்பை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

x
தினத்தந்தி 29 Sept 2021 3:44 PM IST (Updated: 29 Sept 2021 3:44 PM IST)
படப்பை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள அமரம்பேடு ஏரிக்கரை சாலை பகுதியில் நேற்று 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள அமரம்பேடு ஏரிக்கரை சாலை பகுதியில் நேற்று 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





