மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 3-ந்தேதி ஏலம்


மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 3-ந்தேதி ஏலம்
x
தினத்தந்தி 29 Sep 2021 10:18 AM GMT (Updated: 29 Sep 2021 10:18 AM GMT)

மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 3-ந்தேதி ஏலம் விடப்படுகிறது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 39 இருசக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களை, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவு படி, வருகிற 3-ந் தேதி காலை 10 மணியளவில் காஞ்சீபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் கேட்பவர்கள் முன் வைப்பு கட்டண தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும்.

விற்பனை வரி

வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவீதம், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் உடனடியாக செலுத்தி விட வேண்டும்.

வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தகவல் அறிவிப்பு பலகை மற்றும் காஞ்சீபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தின் தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டண தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story