திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 2 Oct 2021 4:36 PM GMT (Updated: 2 Oct 2021 4:36 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
79 பேருக்கு கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது. 
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
பலி இல்லை 
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 188-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 371-ஆக உள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் 862 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் கொரோனா பலி இல்லை. இதனால் பலி எண்ணிக்கை 955-ஆக உள்ளது.

Next Story