சேரன்மாநகரில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்த வாலிபர் கைது


சேரன்மாநகரில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2021 10:23 PM IST (Updated: 2 Oct 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

சேரன்மாநகரில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்த வாலிபர் கைது

கோவை

கோவை சேரன்மாநகர் வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மனைவி சித்திரைசெல்வி (வயது 43). இவர் குமுதம் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

 அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அம்பாள் நகர் அருகே திடீரென சித்திரை செல்வியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்தார். இதில் நிலை தடுமாறிய சித்திரைசெல்வி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அந்த வாலிபரை துரத்தி மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

 பின்னர் அவரை பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் பீளமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
1 More update

Next Story