அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம்


அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம்
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம் எளிய முறையில் நடைபெற்றது.

சோளிங்கர்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம் எளிய முறையில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அமிர்தவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரத்தில் தங்க கேடயத்தில்  எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன்‌ வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது, 

அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து பக்தர்கள் அனுமதி இன்றி எளிய முறையில் உற்சவம் நடைபெற்றது.

Next Story