ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Oct 2021 8:46 PM GMT (Updated: 2 Oct 2021 8:46 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாகவே உள்ளது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ளது. நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 101 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 558 பேருக்கு பரிசோதனை செய்ததில், 102 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 108 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 278 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 672 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 1,151 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story