76 பேருக்கு கொரோனா தொற்று


76 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 3 Oct 2021 3:52 PM GMT (Updated: 3 Oct 2021 3:52 PM GMT)

76 பேருக்கு கொரோனா தொற்று

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது.  76 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.  சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். 
76 பேருக்கு கொரோனா 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. 76 பேருக்கு நேற்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.  இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
ஒருவர் பலி 
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 268-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 86 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 457-ஆக உள்ளது. 
இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 956-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 855 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வராததால் அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story