உழவர் சந்தை சாலையில் குவிந்து கிடக்கும் குப்பை


உழவர் சந்தை சாலையில் குவிந்து கிடக்கும் குப்பை
x
தினத்தந்தி 3 Oct 2021 4:06 PM GMT (Updated: 3 Oct 2021 4:06 PM GMT)

உழவர் சந்தை சாலையில் குவிந்து கிடக்கும் குப்பை

ாராபுரம், 
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை சாலையில் குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
தாராபுரம் பகுதியில் பிரதான சாலையாக விளங்குவது உழவர் சந்தை சாலை. இந்த சாலையில் தினசரி உழவர் சந்தைக்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் மிக முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது.
இப்பகுதியை சுற்றி சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் பக்கவாட்டில் உள்ள பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. 
நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
மேலும் அனைத்து வீடுகளிலும் சிறுவர்களும், குழந்தைகளும் இருப்பதால் கொசுக்கள் அதிகரித்து நாள்தோறும் நோய்த் தொற்றுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களும் இவ்வழியே நாள்தோறும் 20 முறைக்கும் மேலாக சென்றாலும், தேங்கி இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தும் எண்ணம் ஏற்படுவதில்லை. 
சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து கூறினால், கூறும் நேரங்களில் மட்டுமே குப்பைகள் அகற்றப்படுகிறது. பின்பு மறுபடியும் தேங்கிக்கிடக்கும் சூழல் ஏற்பட்டால் கண்ணில் பட்ட குப்பைகளை கூட அகற்றுவதற்கு தயாராக இல்லாமல் நகராட்சி நிர்வாகம் உள்ளது.
அழுகிய காய்கறிகள்
அத்துடன் நகரின் பிரதான சாலையில் தேங்கி இருக்கும் குப்பைகளுடன் தினசரி உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அழுகிய காய்கறிகளை, தக்காளிகளை கொட்டி செல்வதால் நாய்கள் மற்றும் பெருச்சாளிகள் அதிக தொல்லை கொடுத்து வருகிறது.
தற்போது தாராபுரம் பகுதியில்கொரோனா வைரஸ் பரவி உயிர்கள் பலியாகும் சூழலில், குப்பைகள் அப்புறப்படுத்தாமல் அதன் மூலம் தொற்று நோய் பரவி உயிர் பலியாகும் சூழல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக உழவர் சந்தை அருகே சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story