வாணியம்பாடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
வாணியம்பாடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-பெருமாள்பேட்டை பைபாஸ் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாணியம்பாடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், நியூடவுன் ஜீவாநகரை சேர்ந்த ஜான்பாஷா (வயது 39), கோணாமேடு-பரமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (22), அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த திருப்பதி (20), அம்பலூர் பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (30) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story