மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி சாவு


மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 4 Oct 2021 9:10 PM GMT (Updated: 4 Oct 2021 9:10 PM GMT)

மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மனைவி நீலாவதி (வயது 38). இவர் அதே ஊரை சேர்ந்த துரைராஜ் என்பவரது வயலில் மக்காச்சோள பயிருக்கு உரம் போடுவதற்காக கூலி வேலைக்கு சென்றுள்ளார். மக்காசோளப் பயிருக்கு உரம் வைத்தபோது மின் கம்பத்தின் அருகில் உள்ள ‘ஸ்டே’ கம்பியில் நீலாவதி மோதி உள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே நீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கை.களத்தூர் போலீசார், நீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story