மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 9:31 PM GMT (Updated: 9 Oct 2021 9:31 PM GMT)

மதுரை உத்தங்குடியில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 62). இவர் மதுரை உத்தங்குடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று கண்ணம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story