கொரோனாவுக்கு மூதாட்டி சாவு


கொரோனாவுக்கு மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 10 Oct 2021 8:27 PM GMT (Updated: 10 Oct 2021 8:27 PM GMT)

மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.

மதுரை,

மதுரையில் நேற்று 4,500 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 847 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 19 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 11 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 73 ஆயிரத்து 399 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 281 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 71 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

Related Tags :
Next Story