ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Oct 2021 10:22 PM GMT (Updated: 11 Oct 2021 10:22 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஈரோடுஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 387 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 75 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2,803 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 1,190 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 93 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 937 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 676 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story