காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
x
தினத்தந்தி 12 Oct 2021 8:59 AM GMT (Updated: 12 Oct 2021 8:59 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலமாக இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சத்து 26 ஆயிரம் நபர்களில் முதல் தவணையாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 638 நபர்களும், 2-வது தவணையாக 1 லட்சத்து 77 ஆயிரத்து 430 நபர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 10-ந் தேதி 600 மையங்களில் 48 ஆயிரம் நபர்களுக்கு செலுத்த திட்டமிட்டு மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.

இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. மேலும் முதல் தவணை செலுத்தி கொண்ட நபர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்தி கொள்ள ஏதுவாக அவர்களின் விவரங்கள் அந்தந்த வட்டார மற்றும் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவ்வகையில் ஒரே நாள் சிறப்பு முகாமில் 31 ஆயிரத்து 8 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Next Story