சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண்கள் கைது


சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண்கள் கைது
x
தினத்தந்தி 12 Oct 2021 6:52 PM GMT (Updated: 12 Oct 2021 6:52 PM GMT)

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலூர், 
மேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள கே.ஆர்.வி. சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 1.10.2021-ந் தேதி 2 பெண்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து 10 லிட்டர் நெய் பாட்டில்கள் மற்றும் ஹார்லிக்ஸ் போன்ற விலை உயர்ந்த பொருட்களை திருடி தப்பினர். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்ததுதெரிய வந்தது. இந்தநிலையில் அதே கடைக்கு நேற்று பொருட்கள் வாங்குவதுபோல அதே பெண்கள் திருட முயன்றனர். அவர்களை பிடித்து மேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்கள் வாடிப்பட்டி தாலுகா, விக்கிரமங்கலத்தை சேர்ந்த ராக்கம்மாள் (வயது60), வைரமணி (48) என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story